சென்னை :
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. மாணவர்கள் எதிர்நோக்கிய இந்த நேரத்தை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அதிகாரப்பூர்வமாக முடிவுகளை வெளியிட்டார்.
மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி www.tnresults.nic.in மற்றும் https://results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் பயின்ற பள்ளிகள் மற்றும் பதிவு செய்த கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் முடிவுகள் அனுப்பப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்ச்சி விகிதம் :
இந்த ஆண்டு தேர்வெழுதிய 8,71,416 மாணவர்களில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்று, மொத்த தேர்ச்சி விகிதம் 93.80% ஆகியுள்ளது.
மாணவிகள்: 4,17,183 பேர் – 95.88%
மாணவர்கள்: 4,00,078 பேர் – 91.74%
மாணவிகள், மாணவர்களை விட 4.14% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
100க்கு 100 பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை :
அறிவியல் – 10,838 பேர்
சமூக அறிவியல் – 10,256 பேர்
கணிதம் – 1,996 பேர்
ஆங்கிலம் – 346 பேர்
தமிழ் – 8 பேர்
இந்த ஆண்டு மாணவர்கள் பல பாடங்களில் சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழிலும் 100க்கு 100 பெற்றுள்ள 8 மாணவர்கள் கவனிக்கத்தக்கவர்கள்.