மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கீழ் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
தேனி, அல்லிநகரம் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்திற்குள் உள்ள கொடி மரத்திற்கு கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக இன்று காலை அல்லிநகரம் பகுதியில் இருந்து வீரப்ப அய்யனார் சாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டு மேளம் நாதஸ்வரம் முழங்க மலைக்கோயிலுக்கு வந்தடைந்தார்
அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்புப்பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் கோஷங்களுடன் கொடி மரத்தில் கொடி கம்பம் ஏற்றப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் கொடி மரத்திற்கு வஸ்திரம் கட்டி பூக்களை தூவி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது
தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கொடியேற்றும் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.
இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சியில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

















