புதுடெல்லி : இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை என்பது இன்று உருவான ஒன்று அல்ல. இது பல ஆண்டுகளாகவே தொடரும் ஒரு விவகாரம். சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் செய்வதும், அத்துமீறி கட்டுமான பணிகளை செய்வதும் வழக்கமானதாகிவிட்டது. மேலும், இந்திய பகுதிகளைச் சேர்த்தே வரைபடங்கள் வெளியிடுவதும் சீனாவின் தண்டனையில்லாத போக்காக இருந்து வருகிறது.
இந்நிலையில், சீன அரசு அருணாசலப் பிரதேசத்திற்கு “ஜாங்னான்” என்ற பெயரை வைத்து, அந்த மாநிலத்திற்குள் உள்ள பல பகுதிகளின் பெயர்களையும் மாற்றி, சீன மொழியில் புதிய பெயர்கள் சூட்டியுள்ளது. இது குறித்து சீனா, புவியியல் தரவுகளின் அடிப்படையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
இதற்கு இந்தியா வலுவான பதிலை கொடுத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஓருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே எப்போதும் இருந்து வருகிறது. சீனாவின் இவை போன்ற படைப்புரிதியான, வீண் முயற்சிகள் யதார்த்தத்தை மாற்ற முடியாது,”என கூறப்பட்டுள்ளது.
மேலும், வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்ததாவது:
“கிரியேட்டிவாக பெயர் சூட்டுவது யதார்த்தத்தை மாற்றிவைக்க முடியாது. அது வெறும் நிழல்மட்டுமே,”
என்றார்.
இதனுடன் தொடர்புடைய நடவடிக்கையாக, சீனாவைச் சேர்ந்த சில செய்தி நிறுவனங்களின் எக்ஸ் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிட வேண்டாம் என, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சீன ஊடகங்களுக்கு அறிவுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.