ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒழுகைமங்கலம் கிராமத்தில் புகழ்பெற்ற புராதன பிரார்த்தனை தலமான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சோழ நாட்டின் சக்தி பீடங்களில் ஒன்றாக திகழும் இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
விழாவில் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி என்னும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் உட்பிரகாரத்தை சுற்றி வந்து திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரினை வதம் பிடித்து இழுத்தனர் தேரானது நான்கு வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது. பெண்கள் மாவிளக்கு தீபமிட்டும், அங்கப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதல் நிறைவேற வழிபாடு செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

















