எங்கள் கூட்டணியில் இந்திய நாட்டின் பாரத பிரதமர் ஜி எங்களுடன் இருக்கிறார். ஜி இருக்கும் வரை, ஜீபூம்பா போல் தமிழ்நாட்டில் எல்லாம் நடக்கும்: கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு வறட்டுத்தனமாக, அரசியலுக்காக மத்திய அரசோடு வீண் விவாதம் செய்து கொண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சியை கோட்டை விட்டனர்: விழுப்புரத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேச்சு:
விழுப்புரம் அடுத்த சூரப்பட்டு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம்.
தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம். இந்த ஆட்சி ஐசியூவில் உள்ளது. தேர்தல் அறிவித்தவுடன் ஆட்சிக்கு பால் ஊற்றி விடலாம். வாக்களிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. போதும் இந்த ஆட்சி. ஆயிரம் ரூபாய் மற்றும் ஓசி பேருந்தைத் தவிர இந்த திமுக ஆட்சியில் மக்கள் பயனடைந்த ஏதேனும் ஒரு திட்டத்தை சொல்ல முடியுமா. ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக் கடனை ரத்து செய்வோம் என கூறினார்கள். ஐந்தாண்டு முடிந்துவிட்டது ஆனால் ரத்து செய்யவில்லை. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்தால் வங்கியில் பெற்ற கல்விக்கடனை அரசாங்கம் ஏற்று, வங்கிக்கு பணம் செலுத்தும். நாங்கள் செலுத்துவோம், எங்களால் கட்ட முடியும். ஏனென்றால் எங்கள் கூட்டணியில் இந்திய நாட்டின் பாரத பிரதமர் ஜி எங்களுடன் இருக்கிறார். ஜி இருக்கும் வரை, ஜீபூம்பா போல் தமிழ்நாட்டில் எல்லாம் நடக்கும். மோடி எங்களுடன் உள்ளார். மோடி இந்திய நாட்டின் பிரதமர், அவர் நினைத்தால் தமிழ் நாட்டுக்கு தேவையான அனைத்து நிதிகளையும், திட்டங்களையும் வழங்க முடியும். வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு வறட்டுத்தனமாக, அரசியலுக்காக மத்திய அரசோடு வீண் விவாதம் செய்து கொண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சியை கோட்டை விட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வங்கி அதிகாரிகளையும் அழைத்து பேசுவோம். நாங்கள் அழைத்தால் வங்கி அதிகாரிகள் வந்தே ஆக வேண்டும். வர முடியாது என கூற முடியாது. ஏனென்றால் மோடி எங்களுடன் உள்ளார். வரவில்லை என்றால் அவர் அங்கு இருக்க முடியாது. வேறு ஊருக்கு சென்று விடுவார். கடனுக்கான வட்டியையும், அபராதத்தையும் தள்ளுபடி செய்ய கூறுவோம், ஏனென்றால் எங்களால் ஏனென்றால் என்னுடன் மோடி உள்ளார். அசல் தொகையிலும் ஐந்தாயிரம் கோடியை தள்ளுபடி செய்யக்கூறுவோம், ஏனென்றால் மோடி எங்களுடன் இருக்கிறார். நம்மை விட திமுகவினரே ஆட்சி குறித்து ககடுமையான விமர்சனம் செய்கிறார்கள். என பேசினார்.
மேடை பேச்சு:
சிவி.சண்முகம். (அதிமுக முன்னாள் அமைச்சர்)















