திமுக கூட்டணியின் தோல்விக்கு, திமுகவின் முன்னணி தலைவர்கள் செயல்பாடுகளே காரணம், விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து ஆ ராசா தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியது, திமுக தலைமை இதை கண்டிக்கும் என்று நம்புகிறோம், தவெகவினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை வரவேற்கத்தக்கது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் எஸ் எஸ் பாலாஜி மயிலாடுதுறையில் பேட்டி :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆன எஸ் எஸ் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்பொழுது, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு தற்பொழுது நிறைவேறியுள்ளது. 2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி மூலம் இந்த கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியை முன்னெடுத்தது. இது சாத்தியமற்றது என திமுக அதிமுக கூறியிருந்த நிலையில், சாத்தியமான ஒன்றாக மாறி உள்ளது. திமுக கூட்டணி தோல்விக்கு கட்சியின் முன்னணி தலைவர்கள் காரணம் என திமுகவைச் சேர்ந்த அவர்களை சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சியில் பங்கு பெரும் இந்த நிலையில், திமுகவை சேர்ந்த முன்னணி தலைவர்கள் கீழ்த்தரமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அக்கட்சியின் முன்னணி தலைவர் ஆன ஆ ராசா தெரிவித்துள்ள கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை திமுக தலைமை கண்டிக்குமென்று நம்புகின்றோம். தவெகவினர் தன்னிச்சையாக அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளக்கூடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியிருக்கிறார். அரசு அலுவலகங்களில் நமது தேவையை கேட்பது வேறு, ஆய்வு செய்வது என்பது வேறு. அக்கட்சி இதனை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது வரவேற்கத்தக்கதாகும், என்று தெரிவித்தார்.













