மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட சாரங்கபாணி மேம்பாலத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜகவினர் குற்றச்சாட்டு , உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு ஆன்லைன் மூலம் நிர்வாகிகள் புகார். தொடர்ந்து இது ஆண்டவனுக்கே அடுக்குமா என்ற போஸ்டர் மயிலாடுதுறை நகரம் ஒட்டப்பட்டது :-
மயிலாடுதுறை நகரில் கும்பகோணம் டு சீர்காழி நெடுஞ்சாலையில் உள்ள சாரங்கபாணி மேம்பாலம் 6 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஐந்தாம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதனிடையே மேம்பாலத்தில் சரிவர பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மேம்பாலம் உறுதித் தன்மையின்றி காணப்படுவதாகவும் , மேலும் பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாததால் முறையான விதிமுறைகளின் படி பராமரிப்பு பணிகள் சரி வர செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி பாஜக முன்னாள் மாவட்ட தலைவரும் , தூய்மை இந்தியா திட்டத்தின் மயிலாடுதுறை ஒருங்கிணைப்பாளருமான மோடி கண்ணன் ஆன்லைன் வாயிலாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மனு அளித்துள்ளார். இது தொடர்பாக உரிய ஆய்வு செய்து உரிய ஆய்வு செய்து ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து இது தொடர்பாக ஆண்டவனே இது அடுக்குமா என சுவரொட்டி போஸ்டர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது.

















