ஏடிஎம் இயந்திரம் உடைக்கும் முயற்சி தோல்வியடைந்தால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த 15 லட்சம் ரூபாய் தப்பியது !
கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய வீதியாக இருக்கக்கூடிய கடைவீதியில் கரூர் வைஸ்யா பேங்க் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது.இந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.நீண்ட நேரமாக உடைக்க முயற்சித்தும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்…
இந்த நிலையில் நீண்ட நேரமாக ஏடிஎம் இயந்திரம் வேலை செய்யவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் அளித்த நிலையில் வங்கி மேலாளர் நேரில் வந்து பார்த்த போது ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.இது குறித்து வங்கியின் மேலாளர் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தங்கவேல் தலைமையிலான போலீசார் ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த 15 லட்சம் ரூபாய் தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.