சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில், 5-ஆம் நாளாக ஜமாபந்தி கிராம கணக்குகள் தணிக்கை செய்யும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. திருவெண்காடு சரகத்திற்கு உட்பட்ட 15 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்தனர்.
​பொதுமக்களின் மனுக்களை கனிவுடன் பரிசீலனை செய்த டி.ஆர்.ஓ பூங்கொடி மற்றும் வட்டாட்சியர் ராஜரத்தினம் ஆகியோர், மனுக்கள் மீது கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
​இன்றைய தினம் மட்டும் பொதுமக்கள் தரப்பில் இருந்து மொத்தம் 179 மனுக்கள் பெறப்பட்டு, அவை துறைவாரியாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக 908 மனுக்கள் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜமாபந்தி நிகழ்வின் ஒரு பகுதியாக, தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
​வீடற்ற 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,
​10 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்,
​சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்,
​ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கினார்.

இந்நிகழ்வில், தனி வட்டாட்சியர்கள் சண்முகம், சபிதா தேவி, ஜெனிட்டா மேரி, துணை வட்டாட்சியர்கள் பாபு, ரஜினி, ரகு, கணேசன், வட்ட துணை ஆய்வாளர் கனிமொழி, வருவாய் ஆய்வாளர்கள் யோகா, அருளாம்பிகா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் குபேந்திரன், ராதாகிருஷ்ணன், வீரபாண்டியன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version