மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
அலுவலக வாயில் கதவு மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. பத்திரப்பதிவு செய்வதற்காக வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் உள்ளேயே உள்ள நிலையில் உள்ளிருந்து ஒருவரும் வெளியேறுவதற்கோ வெளியில் இருந்து உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்படாமல் சோதனை நடைபெற்று வருகிறது.














