சென்னை : நீண்டகாலமாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு அரியர் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக இணைப்பு மற்றும் தொலைநிலைக் கல்வி மூலமாக பொறியியல் பட்டப்படிப்பு பயின்ற மாணவர்களில் பலர் இன்னும் அரியர் வைத்துள்ளனர். குறிப்பிட்ட காலம் கடந்தும் தேர்ச்சி பெறாத மாணவர்களை மனதில் கொண்டு, அவர்களுக்கென 2025 ஏப்ரல்-மே மற்றும் ஜூன்-ஜூலை மாதங்களில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், மே 17க்குள் http://coe1.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மையங்கள், அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் மே 27க்குப் பிறகு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் எண்ணிக்கையை பொருத்தே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.