விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர செயலாளர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து, .
இந்த பிரச்சார வாகனம் மூலம் விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமம் கிராமமாக அரசின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள், கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவை ஒலி-ஒளி அமைப்புகள் மூலம் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியின் போது பேசிய அவர், மக்களின் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெறும் வகையில் திமுக சார்பில் வலுவான தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும், மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக பிரச்சார வாகனங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version