சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில், முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் முன்னிலையில், பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிமுகவில் இணைந்து அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளனர்
இந்த நிகழ்ச்சி, தாரமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் காங்கேயனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில், அமமுக இளைஞரணி மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட துணைச் செயலாளர் சுதா அண்ணாமலை, பனங்காட்டூர் திமுக கிளை பிரதிநிதி ஜெயவேல், ஆரூர்பட்டி பாமக கிளைச் செயலாளர் சக்திவேல், காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயகோபி, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் பிரபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதன் மூலம், தமிழக வெற்றிக்கழகம் சேலம் மாவட்டத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த கட்சியின் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். எடப்பாடியின் இந்த அணிச்சுடரான அணுகுமுறை, மாற்றுக் கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் செல்வாக்கு குறித்து ரகசிய சர்வே ?
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் தாக்கத்தை மதிப்பீடு செய்ய, அதிமுகவின் உள்கட்சி ரகசியமாக ஒரு தனியார் நிறுவனம் மூலம் கணக்கீடு நடத்தியதாம். இந்த ரிபோர்ட் எடப்பாடியின் மகன் மிதுன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வே முடிவுகளின்படி, விஜய் மாநிலமெங்கும் 8% முதல் 10% வரை வாக்குகளைப் பெறக்கூடியார். எனினும், அவர் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதில்லை. குறிப்பாக, வடதமிழகத்தைத் தவிர மற்ற மாவட்டங்களில் அவர் வெற்றி பெறுவது கடினம் என கூறப்பட்டுள்ளது.
“தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி”
விஜய்க்கு வெற்றிக்கான வாய்ப்பு, அவர் தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே இருக்கலாம். ஆனால், திமுக-அதிமுக நேரடி வேட்பாளர்களை எதிர்கொண்டால் தோல்வியடையும் என்றும், கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டால் வெற்றிக்கூடும் என்றும் அந்த சர்வே தெரிவிக்கிறது.
இந்த தகவல்கள் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளன என்று, மிதுனின் நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.