சென்னையில் நடிகர் அஜித் அனுமதி

சென்னை:

பிரபல நடிகரும், கார் பந்தயத்திலும் புகழ்பெற்றவருமான திரு. அஜித் குமார், சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ‘வித்யாசமான’ கதைகளில் இரு படங்களில் நடித்த அஜித், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், பத்ம பூஷன் விருதை பெற்றார். இந்த சிறப்புவிழாவை முடித்துவிட்டு நேற்று சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்களை சந்திக்கும் போது, திடீரென காலில் சிறிய காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிகிறது. முன்னதாகவே, அவருக்கு ஒரு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடந்திருந்தது. அதற்கான பின்வட்ட சோதனைகள் மற்றும் தற்போது ஏற்பட்ட காயம் ஆகியவற்றுக்காகவே அவரை அனுமதித்திருக்கலாம் என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் வெளியாகியவுடன், அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ஆனால் தற்போது வரை, அஜித் தரப்பில் இருந்து இதை உறுதி செய்யும் வகையில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Exit mobile version