திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகநாதன் அவரது மகன் சபரிநாதன் (22) இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் பந்தல் காண்ட்ராக்டரிடம் பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் மன்னார்குடி அருகில் உள்ள தேவேந்திர புரம் கிராமத்தில் சாந்தகுமார் என்பவர் வீட்டில் புதுமனை புகுவிழாவிற்கு பந்தல் அமைக்கும் பணியில் சபரிநாதன் (22) மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் (25) ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் பந்தல் அமைக்கும் போது இரும்பு பைப் மின்கம்பத்தில் உரசியதில் சபரிநாதன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர் அக்கம்பக்கத்தினர் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர் அப்போது சபரிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் விக்னேஷ் பலத்த காயத்துடன் உள்ளதை பார்த்த அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார் அங்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படடு வருகிறது இச்சம்பவம் குறித்து மன்னார்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
புதுமனை புகுவிழாவிற்கு பந்தல் அமைக்கும் போது மின் கம்பத்தில் இரும்பு பைப் உரசியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

















