சீர்காழி அருகே மதுபான கடை வாயிலில் மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு. கள்ளமது அருந்தி உயிரிழந்ததாக கூறி அரசு மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம் போலீஸார் விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்னலக்குடி கிராமத்தில் அரசு மதுபான கடை 5766 இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று நெம்மேலி கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபர் மதுபான கடை திறப்பதற்கு முன்பு கடைக்கு வந்துள்ளார்.அப்போது மயங்கியதால் அருகில் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து 108 வாகனம் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் போலிசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.108 வாகன மருத்துவ உதவியாளர் மயங்கிய சதீஸை சோதனை செய்ததில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.இதனை அடுத்த அவரது உறவினர்கள் மதுபான கடை அருகே செயல்பட்டு வரும் பாரில் கள்ளமது விற்பனை செய்து வருவதாகவும் அதனை அருந்தியே சதிஸ் உயிரிழந்திருப்பார்.எனவே கள்ளமது விற்பனை செய்த பார் உரிமையாளரை கைது செய்ய வேண்டும்,இறந்த சதிஸ் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டுமென சதிஸ் உடலை உடற்கூறு ஆய்வுக்கு எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களிடம் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் காவல் ஆய்வாளர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுபானகடையில் வாலிபர் உயிரிழந்த செய்தி கேட்டு கிராம மக்கள் கூடி வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.














