மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வெட்டிய நபரை போலீஸில் பிடித்து தந்த கல்லூரி மாணவன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் சாலைமறியல் போராட்டம்: 40 பேர் கைது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பூதங்குடியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவரான பாஸ்கர் என்பவர் கடந்த 2-ஆம் தேதி சிவா, பிரகாஷ் ஆகியோருடன் சண்டை போட்டதாகவும், இதுகுறித்து, மறுநாள் பாஸ்கரும் அவரது மனைவியும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது காவல் நிலையம் அருகே அரிவாளால் வெட்டி காயங்களை ஏற்படுத்தியதாக புகார் அளித்ததன் பேரில் மணல்மேடு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிவா, பிரகாஷ் இருவரையும் கைது செய்தனர். இதனிடையே கடலங்குடியை சேர்ந்த சங்கர் என்பவர் இருசக்கரவாகனத்தில் சென்றபோது பாஸ்கரனின் மகன்களான ஸ்ரீபாபு மற்றும் சஞ்சய் ஆகியோர் வழிமறித்து சிவாவும், பிரகாசும் எங்கே என கேட்டு உருட்டு கட்டையால் தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மணல்மேடு போலீசார் கல்லூரி மாணவரான சஞ்சய்யை கைது செய்தனர். இந்நிலையில், கள்ளச்சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே பாஸ்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் பாஸ்கரை வெட்டிய மற்றொரு நபரான சங்கர் என்பவரை, கல்லூரி மாணவரான சஞ்சய் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், சஞ்சயை கைது செய்த போலீசார், சங்கரை விடுவித்து அனுப்பிவிட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றஞ்சாட்டி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டனர். இந்த நிலையில், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறானது என மாவட்ட காவல்துறை மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவாளியை தப்பவிட்டு, பிடித்துத்தந்த கல்லூரி மாணவரை கைது செய்த மணல்மேடு போலீசாரைக் கண்டித்தும், மாணவரை எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்க வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைபரப்பு செயலாளர் தமிழன் காளிதாசன், மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி நா.த.க. வேட்பாளர் கி.காசிராமன் மற்றும் பாஸ்கர் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட 40 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமணகூடத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
















