கோழி உற்பத்தி நிறுவனங்களின் கோழிகளை விற்பனைக்கு அனுபவத்திற்கு முன்னர் அரசின் தீவனகட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடிக்காத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் விரைவில் கடையடைத்து விற்பனை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து மொத்த கறிக்கோழி விற்பனையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
தமிழகத்தில் கோழி உற்பத்தி நிறுவனங்களின் கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்னர் அரசின் தீவனக்கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் அதிக தீவனங்களை கொடுத்து கோழியின் கழுத்துப் பகுதிகளில் தங்குமாறு செய்து கொடுப்பதினால் கோழிகளை ஏற்றிவரும் வாகனங்களில் கோழிக் கழிவுகளால் நிரம்பி வழிவதோடு சுற்றுப்புற சூழல் ஏற்படுவதாகவும் அப்படியாக வரும் கூடுதல் எடையால் இறைச்சி நுகர்வோர்களுக்குச் சென்றடையும் போது 20 ரூபாய் முதல் 30 வரை பொதுமக்களுக்கு கோழி விலையில் கூடுதலாக விற்பனை செய்யும் நிலை உள்ளதால் அரசின் தீவனக்கட்டுப்பாடு விதிமுறைகளை கோழி உற்பத்தி நிறுவனங்கள் கடைபிடிக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட மொத்த கறிக்கோழி விற்பனையாளர்கள் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மேலும் இதுகுறித்து பலமுறை உற்பத்தி நிறுவனங்களுக்கு தெரிவித்தும் உற்பத்தி நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல் செய்லபட்டு வருவதால் அரசின் கவனத்ததை ஈர்க்கும் வகையில் விரைவில் தமிழ்நாடு முழுவதும் கடையடைத்து விற்பனையை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
பேட்டி – செல்வகுமார்,
(கறிக்கோழி விற்பனையாளர்கள் சங்கத்தலைவர்)













