கோவை தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்.இவர் சங்கனூர், நல்லாம்பாளையம் சாலையில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 15 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வியாபாரம் முடித்ததும், கடையை மூட தயாராகி கொண்டு இருந்தார்.அப்பொழுது அவருடைய கடைக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு தம்பதி வந்துள்ளனர்.
அவர்கள் சக்திவேலிடம் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்தோம் ஏ.டி.எம் கார்டு இருப்பதால் பணம் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்து அவசரத்தில் பணம் எடுக்காமல் வந்து விட்டோம், இங்கு ஏ.டி.எம் மில் பணம் எடுக்க சென்ற போது எங்களது கார்டு வேலை செய்யவில்லை என்றும் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற அவசரமாக ரூபாய் 2,000 தேவைப்படுகிறது.
உங்களிடம் கையில் இருக்கும் பணத்தை கொடுத்தால் எங்களது செல்போனில் இருந்து ஜிபே மூலம் பணம் அனுப்பி விடுகிறோம் என்று கூறி உள்ளனர்.
மருத்துவமனையில் அவசரம் என கூறியதை நம்பி சக்திவேல் அவர்களிடம் ரூபாய் 2,000 கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டவர்கள் ஜிபே மூலம் பணத்தை அனுப்பி விட்டதாக கூறி தங்களது செல்போனில் இருந்து குறுஞ்செய்தியை சக்திவேலிடம் காண்பித்தனர். அதைப் பார்த்து அவர் பணம் வந்து விட்டதாக கருதினார்.
அதன் பின்னர் அவர்கள் இன்னும் ரூபாய் இரண்டாயிரம் கொடுத்தால் அதை ஜிபி மூலம் அனுப்பி விடுவதாக கூறினார். அதை நம்பி அவர் மீண்டும் ரூபாய் 2,000 பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். உடனே அவர்கள் ஜிபே மூலம் அனுப்பி விட்டதாக கூறி செல்போனில் குறுஞ்செய்தியை காண்பித்து விட்டு சென்றனர். நீண்ட நேரத்துக்கு பிறகு சக்திவேல் தனது வங்கி கணக்கு இருக்கும் பணத்தை சரிபார்த்தார். அப்பொழுது அவரிடம் பணம் வாங்கிய தம்பதி அனுப்பியதாக கூறிய பணம் வங்கி கணக்கு வரவில்லை என்பதும் அவர்கள் அவரிடம் ரூபாய் 4 ஆயிரம் மோசடி செய்து விட்டு தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.
புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது தான் இதே போல் மேலும் பலரிடம் அந்த தம்பதி பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது..இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் சரவண சுந்தர் மோசடி தம்பதியை பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மோசடி தம்பதி வந்த இருசக்கர வாகனங்கள் பதிவினை கண்டறிந்தனர்..
இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த தம்பதி சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது ரிஸ்வான். அவருடைய மனைவி ஷர்மிளா பானு என்பதும் அவர்கள் இரண்டு பேரும் காதலித்து ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. அந்த தம்பதியை காவல்துறையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அந்த தம்பதி மொத்தம் 112 பேரிடம் ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் பண மோசடி தெரிய வந்தது. கைதான தம்பதியர் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தார்..
கைதான ரிஸ்வான் முன்பு கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்து கொண்டு உள்ளார். அப்பொழுது ஒரு டிரைவர் நூதன முறையில் பணத்தை இழந்ததாக கூறினார். அதாவது செல்போனில் ஜிபேயில் பணம் அனுப்பும் போது பே மற்றும் ரிக்வஸ்ட் என இரண்டு குறியீடுகள் வரும், அதில் பே என்று குறியீட்டை அழுத்தினாள் பணம் போகும், ரெக்வஸ்ட் என்று அழுத்தினால் பணம் போகாது. உங்களிடம் பணம் கேட்கிறார் என்று குறுஞ்செய்தி மட்டும் வரும். இதை சிலர் சரியாக கவனிக்கவில்லை பணம் வந்து விட்டதாக நினைத்து விடுகிறார்கள்.
இதை தெரிந்து கொண்டு ரிஸ்வான் தனது காதல் மனைவியுடன் சேர்ந்து பலரிடம் நூதன முறையில் மோசடியில் அரங்கேற்றி உள்ளனர். பணம் இழந்தவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டதால் உடனே அவர்கள் தொடர்பு கொள்ள முடியாதபடி அந்த எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டு வைத்து உள்ளனர். சிறிய தொகை தானே என்று பலரும் புகார் செய்யாமல் இருந்து உள்ளனர். இதனால் அவர்கள் தொடர்ந்து பலரிடம் மோசடியை அரங்கேற்றியதோடு போலீசிலும் சிக்காமல் தப்பி வந்து உள்ளனர். வாடகை வீட்டில் வசித்து வந்த காதல் தம்பதி மோசடி செய்த பணத்தை சொகுசு பொருள்கள் வாங்கி உல்லாசமாக இருந்து உள்ளனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.