மயிலாடுதுறை மாவட்டத்தில், அனுமதி பெற்ற அளவைவிட கூடுதல் 150 ஏக்கருக்கு மணல் எடுத்து வருவதாக ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

மயிலாடுதுறை மாவட்டத்தில், அனுமதி பெற்ற அளவைவிட கூடுதல் பரப்பளவில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் மணல் குவாரிகள் முறைகேடாக மணல் எடுத்து வருவதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து வாரியை நிறுத்தும் வரை ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா :-

மயிலாடுதுறை மாவட்டத்தில், நான்கு வழி சாலை பணிகளுக்காக, திருமுல்லைவாசல், வேட்டங்குடி, மேலப்பெரும்பள்ளம் கீழப்பெரும்பள்ளம், காழியப்பநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சவுடு மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில், பண்ணை குட்டை வெட்டுவதற்கு அனுமதி பெற்று, முறைகேடாக பல ஏக்கரில் மணல் அள்ளப்பட்டு வந்த நிலையில், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையில், தொடர்ந்து மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருமுல்லைவாசல் பகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் பரப்பளவில் 50 அடிக்கு மேல் 100 ஏக்கரில் மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் நான்கு கிராமங்களில் 50 ஏக்கருக்கு மேல் மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வேட்டங்குடி மற்றும் கேவரோடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து இன்று மனு அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மணல் குவாரியை நிறுத்தப்படும் வரை நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு செல்லமாட்டோம் என்று கூறி அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version