அகிம்சையின் அடையாளமாக விளங்கிய மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆசிஷ் லதா ராம்கோபின் மீது தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் உள்ள ‘நியூ ஆப்ரிக்கா அலையன்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் மகாராஜிடம் ரூ.3.22 கோடியை மோசடி செய்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. ஆசிஷ் லதா, தென் ஆப்பிரிக்காவிலுள்ள பிரபல நெட்கேர் மருத்துவமனைக்கு துணிகள் விநியோகிக்க இந்தியாவில் இருந்து மூன்று கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது; அதன் வரிக்கட்டணத்திற்கு 6 மில்லியன் ரேண்ட் (தென் ஆப்பிரிக்க நாணயம்) தேவை எனக் கூறி, அந்த தொகையை பெற்றார்.
பின்னர் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் தாமதித்ததோடு, தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து மகாராஜ் காவல்துறையில் புகார் செய்தார். விசாரணையில், ஆசிஷ் லதா திட்டமிட்ட முறையில் பண மோசடி செய்தது உறுதியானது.
டர்பனில் உள்ள நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. எனினும், 50,000 ரேண்ட் பிணைத் தொகை செலுத்தி அவர் தற்போதைக்கு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த சம்பவம், உலகம் முழுவதும் மகாத்மா காந்தியின் பெயரை மரியாதையுடன் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. அவருடைய வாரிசு ஒருவர் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.