இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தொற்றுப் பட்டோர் எண்ணிக்கை 7,400 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 269 பேருக்கு புதிய தொற்று உறுதியாகியுள்ளது.
மாநில வாரியாக நோக்கினால், கர்நாடகா மாநிலத்தில் ஒரு நாளில் அதிகமான 132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் 79 பேர், கேரளாவில் 54 பேர், மத்திய பிரதேசத்தில் 20 பேர், தமிழகத்தில் 12 பேர் மற்றும் சிக்கிமில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை மஹாராஷ்டிராவில் 4 பேர், கேரளாவில் 3 பேர், தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு நபர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை நாட்டளவில் கொரோனாவால் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பரவும் சூழ்நிலையை முன்னிட்டு, முதியவர்கள் மற்றும் உடல்நிலை பாதிப்பு கொண்டவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.