திருவண்ணாமலை: உலகப்புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. கோவில் பின்புறத்தில் உள்ள அண்ணாமலையார் மலை என அழைக்கப்படும் பகுதியில், 14 கிலோமீட்டர் நீளமான கிரிவலப் பாதை உள்ளது. பவுர்ணமி நாட்களில் இந்த பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.
இந்த வருட வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்லும் நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி நிகழ்வு வரும் 10-ந் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 12:32 மணிக்கு துவங்கி, 11-ந் தேதி புதன்கிழமை மதியம் 1:58 மணிக்கு முடிவடைகிறது.
மேலும், பவுர்ணமிக்கு முன்னாள் 9-ந்தேதி வைகாசி விசாகம் நாளாக இருப்பதால், அன்றே திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.