கமிஷனுக்கு ஆசைப்பட்டு களிமண் போட முயற்சிக்கும் அதிகாரிகளால் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன மாவட்ட விளையாட்டு அரங்கம் மது பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் அவலம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ராஜீவ் காந்தி மைதானத்தில் கடந்த 25 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் முன்னாள் அமைச்சர் ஏவா வேலு இறகு பந்து கூடைப்பந்து உணவு விடுதி தங்கும் விடுதி உடற்பயிற்சி கூடம் ஓடுதளம் கால்பந்து மைதானம் ஆக்கி கபடி உள்ளிட்ட பயிற்சிகளை மாணவ மாணவியர் மேற்கொள்ளவும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாகவும் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்டத்தின் நவீன விளையாட்டு அரங்கத்தை கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டை துவக்கி வைத்தார்.
அனைத்து கட்டுமான பணிகளும் முடிவடைந்து வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில் ஓடுதளம் பாதை அமைக்கும் பணி மட்டும் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஓடுதள பாதைக்கு தரமான செம்மண் போடுவதற்கு திட்ட மதிப்பீட்டில் பணம் ஒதுக்கப்பட்டு இருந்தும் அதில் கமிஷன் எதிர்பார்த்து கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியுடன் அருகாமையில் இருக்கும் ஏரிகளில் இலவசமாக கிடைக்கும் களிமண் மற்றும் நொரம்பு மண்ணை எடுத்து வந்து போட நிர்பந்தம் செய்வதாக கூறப்படுகிறது.
இதனால் பணிகள் நடைபெறாத சூழ்நிலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அரங்கம் மது பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
எனவே திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடம் ஆகியும் தயார் நிலைக்கு வராத பணிகளை விரைந்து முடிக்க உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் எனவும் கமிஷன் எதிர்பார்க்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

















