மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர், கடலுடன் கலக்கும் பூம்புகாரருக்கு முன்னதாக உள்ள கடைசி கதவணை பகுதிக்கு வந்து சேர்ந்தது, சிறப்பு பூஜைகள் செய்து விவசாயிகள் வழிபாடு, தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால், சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை :-
சம்பா சாகுபடிக்காக, மேட்டூர் அணை கடந்த ஒன்றாம் தேதி திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி பாசன பகுதிக்கு கடந்த ஆறாம் தேதி, தண்ணீர் திறக்கப்பட்டது. பத்து நாட்கள் கழித்து, காவிரி நீர், பூம்புகாரில் கடலுடன் கலக்கும் இடத்திற்கு முன்னதாக உள்ள மேலையூர் கதவணை பகுதிக்கு வந்தடைந்தது. காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கடைசி கதவணை இதுவாகும். கடந்த 13ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்த காவிரி நீர், வினாடிக்கு 803 கன அடி விதம் மாவட்டத்திற்கு காவிரியில் திறக்கப்பட்ட நிலையில், 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடைசி கதவணை பகுதிக்கு காவிரி நீர் வந்தடைந்தது. விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் ஆகியோர் ஆற்றுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி வழிபாடு செய்து காவிரி அன்னையை வரவேற்றனர். அணையில் 7.5 அடி வரை நீர் தேக்க முடியும் என்ற நிலையில், இரண்டடி நீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது, இதன் காரணமாக இந்த பகுதியில் 3,016 ஏக்கர் பாசன பரப்பு பகுதிக்கு போதிய தண்ணீர் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 100 நாட்களுக்கு தண்ணீர் வந்தால் தான் சம்பா பயிரை சாகுபடி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ள விவசாயிகள், தடையின்றி தண்ணீர் திறக்கவும், கர்நாடகத்திலிருந்து உரிய தண்ணீரை கேட்டு பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் குறைவாக வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்தின் இரண்டு பெரிய ஏரிகளான, திருவாலி மற்றும் பெருந்தோட்டம் ஏரி களுக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பைட் :-
சிவபாலன் – விவசாயி














