கன்னியாகுமரி மாவட்டம்: மீனவர்கள் பாதிக்காத வகையில் புதிய தலைமை செயலகம் அமைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் , எந்த ஒரு புதிய திட்டம் வந்தாலும் அதற்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வரத்தான் செய்யும். அதை எல்லாம் எதிர்கொண்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நாகர்கோவிலில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜஜகான் தலைமையில் நடைபெற்றது இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் பிரதாப் சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம், செல்லசாமி, பிரவீன் , மற்றும் சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர் ,
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,
புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என்பது பல்வேறு அரசியலில் கட்சிகளின் நிலைப்பாடு , தற்போது இருக்கும் தலைமைச் செயலக அலுவலகம் இட வசதி மிகவும் குறைவாக உள்ளதால் புதிய தலைமை செயலகம் கட்டும் நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது , பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க ஆய்வு நடைபெற்று வருகிறது எந்த வகையிலும் மீனவர்கள் பாதிக்காத வகையில் அலுவலகம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் , எந்த ஒரு புதிய திட்டம் வந்தாலும் அதற்கு எதிர்ப்பு அரசியல் ரீதியாக வரத்தான் செய்யும். அதை எல்லாம் எதிர்கொண்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் , மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை என்று ஒன்று உள்ளது சிறுபான்மை மக்களுக்கு தேவையான நிதி முழுமையாக மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வருவதில்லை , மத்திய அரசோடு பேசி சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

















