தமிழக அமைச்சரவையில் மாற்றம் வராது – மழை வரும் வெள்ளம், வரும் வடகிழக்கு பருவமழை கனமாக பெய்யும் என்று ஜோசியக்காரர் போல அமைச்சர் செங்கோட்டையன் திருவாரூரில் பேட்டி அளித்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய் துறை தொடர்பான ஆய்வு கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், மீன்வளம் மற்றும் மீன்வள நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு அரசு துறை அலுவலர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் பெயரில் ஊர்காவல் படையினரை பணியாற்ற வைத்தது., பல மணி நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டது மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கட்சிக்கூட்ட அரங்கமாக மாற்றிய தவெகவினர் என பல குளறுபடிகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு 24 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
முன்னதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை பணிகளை ஆய்வு செய்வதற்காக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரிடர் கால முன்னெச்சரிக்கை தடுக்கும் கருவிகளான மரம் அறுக்கும் கருவி, மோட்டார் படகு, மிதவை ஆடைகள், தீயணைக்கும் கருவி உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டதால், காலை 8 மணி முதல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவலர்கள் என்ற பெயரில், அனைவரையும் ஏமாற்றும் வகையில் ஊர்க்காவல் படையினரை 20க்கும் மேற்பட்டோரை பணியாற்ற வைத்ததும், அவர்களுடன் தீயணைப்புத் துறையினர் இணைந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 8 மணிக்கு தொடங்கிய பேரிடர் மேலாண்மை கருவிகள் தொடர்பான ஆய்வை இரவு 7 மணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் விஸ்வநாதன் இணைந்து அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு உடனடியாக சென்று விட்டனர். இதற்காக நாள் முழுவதும் வெயிலில் அதிகாரிகள் காக்க வைப்பது முகசுழிப்பை ஏற்படுத்தியது.
இது மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் குவிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முழுமையாக கையகப்படுத்தி தமிழக வெற்றிக்கழக அலுவலகமாக மாற்றியதால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ரீல்ஸ் எடுப்பது, சால்வை அணிவிப்பது, அமைச்சர்களின் காலில் விழுவது உள்ளிட்ட செய்கைகளால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திணறியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம்..
சாகுபடி செய்யலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு..,
மழை வரும் வெள்ளம், வரும் வடகிழக்கு பருவமழை கனமாக பெய்யும் என்று ஜோசியக்காரர் போல பதில் சொல்லியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மேலும்,இதுவரையில் இல்லாத அளவிற்கு அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து திருவாரூர் மாவட்டத்தில் பயிர் இன்சூரன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
விவசாயிகளுக்கு அறிவித்த பயிர் கடன் தள்ளுபடிக்கு இன்னும் அரசாணை வரவில்லை என்ற கேள்விக்கு….
விவசாயிகளுக்கு நடப்பு சம்பா பருவத்துக்கு புதிய கடன் வழங்குவதில் எந்தவித தடையும் இருக்காது.முதல்வர் அறிவித்த தொகை கூட்டுறவு சங்கங்களுக்கு வந்து சேரும்.
அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்டபோது இது தொடர்பாக பதில் அளிக்க முடியாது என மறுத்து விட்டார் செங்கோட்டையன்.
கர்நாடக அரசிடம் கூடுதல் தண்ணீர் கேட்டு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவில்லை என செய்தியாளர் கேட்டபோது “கொடுப்பாங்க அழுத்தமா”என கேலி செய்யும் வகையில் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு…
மைக்கை பிடுங்கி எரிந்து கொண்டே… அதெல்லாம் யார் சொன்னா..? நீங்கள் தான் கூறுகிறீர்கள் என அமைச்சரவையில் மாற்றம் வராது என்பது வகையில் கூறினார்.
பேட்டி : செங்கோட்டையன் – பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்

















