சீர்காழி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி பொதுமக்கள் வாக்குவாதம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் மனைவி அம்சவல்லி வயது 48இவர் கூலி தொழிலாளி இவர் வீட்டில் வேலை செய்த பொழுது பாம்பு ஒன்று கடித்து உள்ளது அருகில் உள்ள எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்று தன்னை பாம்பு கடித்து விட்டது எனக்கு மருந்து செலுத்தி உயிரைக் காப்பாற்றுங்கள் என்று கதறி உள்ளார். அப்பொழுது அரசு ஆரம்ப சோதனை நேரத்தில் மருத்துவர் பரிசோதனை செய்து ஒரு மணி நேரம் பாம்பு கடித்த வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தஙக வைத்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மேலும் காலதாமதம் ஏற்பட்டது. அப்பொழுது டாக்டர் சாப்பிட சென்று விட்டதால். அங்கு உள்ள உதவியாளர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் தாமதமாக இயற்றினர் ஆம்புலன்சில் ஏறிய போது உடனேயே அம்சவல்லி உயிரிழந்தார். இதனால் தாமதமாக சிகிச்சை அளித்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ் மற்றும் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.













