நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. எனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர் மீதும் என் சொத்தை அபகரித்து வீட்டை விட்டு விரட்டுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தால் நீ என்ன பெரிய ஆளா என காவல்துறை அலட்சியப்படுத்துகிறது என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பியதால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மேல் புதூர் காட்டு கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். கூலி வேலை செய்து வரும் மாற்றுத்திறனாளி யான இவரது மனைவி இந்திரா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு மனு கொடுத்த வந்த பொழுது..
திடீரென கூட்ட அரங்கிற்கு வெளியே தரையில் அமர்ந்து கத்தி கதறி அழுது புலம்ப ஆரம்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பொழுது அவர் கூறுகையில் தன்னுடைய தாத்தாவின் மூலமாக ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தை கொடுக்காமல் துன்புறுத்தி அலை கழிக்கும் அம்மா சரசு, தம்பி பாண்டியன் மற்றும் அவரது மனைவி இந்திராணி அக்கா சாந்தி அவரது கணவர் ராஜா இவரது மகன் ரித்திஷ் அம்மாவின் தம்பி ஜெயேந்திரன் ஆகியோர் அடித்து வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார்கள். மாற்றுத்திறனாளியாக இருக்கும் நான் கல்யாணம் செய்து கொண்டது தப்பா. அக்காவின் கணவர் ராஜா அவரது மகன் ரித்திஷ் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். சொத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது சம்பந்தமாக கந்திலி காவல் நிலையத்தில் ஏழு வருடங்களாக புகார் கொடுத்து அலைக்கிறேன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் அது குறித்து காவல்துறையில் நீ மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் பெரிய ஆளா என்று அலட்சியமாக பேசி அனுப்பி விடுகிறார்கள் என கத்தி கதறி அழுத சம்பவம் பாப்போர் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்தியது















