தரையில் கிடந்த குண்டூசியை எடுத்து பொறுப்புடன் சட்டையில் குத்தியவர்தான் மிகப்பெரிய வங்கி நிறுவனத்தின் தலைவராக மாறினார் என தனியார் வேலை வாய்ப்பு முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இளைஞர்கள் மத்தியில் ஊக்க உரை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் இயங்கும் பொதிகை கல்லூரியில் சில தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நடத்திய நேர்முகத் தேர்வில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பை பெற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணி நியமன கடிதத்தை வழங்கிய திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி பேசுகையில்..
உங்களைப் போன்ற ஒரு நபர் வேலை தேடி வந்து வாய்ப்பு கிடைக்காமல் திரும்பி சென்ற போது அதைப்பற்றி கவலைப்படாமல் தரையில் இருந்த ஒரு குண்டூசியை பொறுப்பாக எடுத்து சட்டையில் குத்திய சம்பவத்தை பார்த்து மீண்டும் அவரை அழைத்த நிறுவன உரிமையாளர் அவரது பொறுப்புணர்ச்சியை கண்டு வேலை கொடுத்ததை தொடர்ந்து அவர் மிகப்பெரிய வங்கி நிறுவனத்தின் தலைவராகவே மாறினார் எனவே அனைவரும் பொறுப்பாக செயல்படுங்கள் என உற்சாகப்படுத்திய ஊக்க உரை இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.















