அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் த. வெ.க வினர் புகார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக ஊரக மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் குறித்து சமூக வலைதளமான முகநூலில் (Facebook) அவதூறான மற்றும் பொய்யான தகவல்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதாகக் கூறி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சுகர்ணா விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகி நிர்மல் ஆனந்த் என்பவர் தனது Facebook பக்கத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழக அமைச்சர்கள் குறித்து அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான, அவதூறான தகவல்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட Facebook கணக்கின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அவதூறு பதிவுகளை வெளியிட்டு வரும் நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அவரது Facebook கணக்கையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேட்டி :தமிழக வெற்றிக்காக நிர்வாகி கில்லி சுகர்ணா.















