தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட துறையை சமூக நீதித்துறை என மாற்று இருப்பதை மறு பரிசினை செய்ய வேண்டும் என திருவாரூரில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி..
திருவாரூர் அருகே விளமல் தனியார் அரங்கில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி திருமணத்தை நடத்தி வைத்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது…..
ஆகஸ்ட் 17 விடுதலை சிறத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 17ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட மாநாட்டை தள்ளி வைத்து இப்போது நடத்துகிறோம். உளுந்தூர்பேட்டை அருகே இந்த மாநாடு நடைபெற உள்ளது. தமிழ் தேசிய உணர்வாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுகிறோம்.
2026 ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டு நடைபெற வேண்டிய துணை காவல் ஆய்வாளர், இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் உள்ளிட்ட சீருடை சீருடை பணியாளர்களுக்கான தேர்வை ஓராண்டுக்கு தள்ளி வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த தேர்வுக்கு தயாரானவர்கள் மிகுந்த ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த ஜூலை ஒன்றோடு வயது தகுதி தேர்வு எழுதுவதற்கான வயது தகுதி பெற்றவர்கள் ஓராண்டு தள்ளி வைப்பதனால் அந்த தகுதியை அவர்கள் இழக்க நேர்கிறது.
தேர்வு எழுத முடியாமல் போகிறது. ஆகவே அரசு இந்த தேர்வை தள்ளி வைப்பதனால் வயது தகுதிக்கு ஆட்படாத அல்லது பாதிக்கப்படுகிறவர்கள் பயன்படக்கூடிய வகையில் வயது தகுதிக்கான வரையறையை தளர்வு செய்யவேண்டும். என்கிற வேண்டுகோளை தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் முன்வைக்கிறோம்.
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறையை அந்த அமைச்சர் அமைச்சகத்தை சமூக நீதித்துறை என்று மாற்றி இருப்பது இப்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சமூக நீதித்துறை என்பது இட ஒதுக்கீடு பெறும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய ஒன்றாகும். ஓபிசி அதாவது பிசி, எம்பிசி, சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் மாற்று திறனாளிகள் என இட ஒதுக்கீடு பெறுகிற அனைத்து பிரிவினரையும் குறிக்கின்ற ஒன்று ஆகவே தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
சேலம் மாவட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலை நிறுவப்பட்டிருக்கிறது. அது நீண்ட காலமாக திறக்கப்படாமல் உள்ளது. அதற்கு அந்த பகுதியிலே சொல்லப்படுகிற ஒரே காரணம் அம்பேத்கர் சிலை கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை போல் உள்ளது. இது பிற சாதி மக்களை அவமதிக்கிற செயல் என்று சொல்லப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி அவர்களே வைத்திருக்கிற சிலை அம்பேத்கர் அவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிற வடிவம்தான் தோற்றம்தான் வட இந்தியாவில் கால் மேல் கால் போட்டு அமர்வது என்பது அவமதிப்புக்குரிய ஒரு செயலாக யாரும் கருதுவதில்லை. முதியவர்கள் முன்னால் இளையவர்கள் கூட கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிற ஒன்றுதான். அதிகாரிகளுக்கு முன்னால் பணியாளர்கள் கூட தனிப்பட்ட சந்திப்பிலே கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு பேசுவது என்பது இயல்பான நடைமுறைதான். ஆனால் தமிழ்நாட்டில் இதை ஒரு பிரச்சனையாக்கி அவருடைய திருவுருவ சிலையை திறக்கவிடாமல் ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக தடுத்து வருகிறார்கள்.
அதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய சிலையை மூட வேண்டும் என்கிற பெயரில் அருகே உள்ள காமராஜர் சிலை ராஜீவ் காந்தி சிலையையும் கூட இப்போது மூடி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே இந்த பிரச்சனையில் நேரடியாக முதலமைச்சர் தலையிட வேண்டும். அதற்கு சுமூகமான ஒரு தீர்வை காண வேண்டும். தலைவர்களின் சிலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது.
ஜூலை 25ஆம் தேதி வள்ளியூர் என்னும் இடத்தில் அம்பேத்கர் சிலையை நான் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த இடம் ஏற்கனவே பல ஆண்டுகளாக சிமெண்ட் சிலையாக இருந்ததை சாதிய சமூகத்தை சாதிய சக்திகள் சேதப்படுத்தியதனால் வெண்கல சிலையாக நிறுவப்படுகிறது. ஆனால் இப்போது அனுமதி பெற வேண்டும் இல்லையேல் திறக்க முடியாது என்று காவல்துறை மறுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அது புதிய இடமில்லை புதிதாக சிலை நிறுவவில்லை. புதுப்பிக்கிறார்கள் அவ்வளவுதான். சிமெண்ட் சிலையை மாற்றி வெண்கல சிலையை நிறுவு…















