சீர்காழியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திரளான தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38 ஆம் ஆண்டு துவக்க விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் 38 ஆம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில் கோஷங்களை எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.தொடர்ந்து சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் வணிகர்கள், பொதுமக்கள், பயணிகள் என நூற்றுக்கணக்கானோருக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜீ.வி.முருகவேல், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தேனூர் ரவிச்சந்திரன்,இரா செந்தில் குமார், காசி இளங்கோவன் மற்றும் நகரத் தலைவர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.













