மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர் … மழை நீரை வெளியேற்றும் மருத்துவமனை பணியாளர்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்து வந்த நிலையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர் இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கோடை மழை பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்தது அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோட்டூர், நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ,வடபாதிமங்கலம் நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது இதனால் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் சமையல் அறையிலும் , சித்த மருத்துவ அறைகளில் மழை நீர் புகுந்துள்ளது இதனால் நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துமனையில் தேங்கிய மழை நீரை பணியாளர்கள் வெளியேற்றி வருகின்றனர் . ஒரு மணி நேரத்திற்கு மேலாக மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு மருத்துவமனை ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.














