விழுப்புரத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் 269 ஆவது குருபூஜை விழா இன்று நடந்தது விழுப்புரம் பழைய பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே நடந்த குருபூஜை விழா நிகழ்ச்சிக்கு யாதவ மகா சபையினர் திரண்டு வீரன் அழகுமுத்துக்கோன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் முன்னாள் சேர்மன் ஜனகராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தி அன்னதானத்தை துவக்கி வைத்தார் வீரன் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி அவர்களுக்கு புகழுரை நிகழ்த்தினார் புகழஞ்சலி செலுத்தினர் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது உடன் யாதவ மகா சபை நகர செயலாளர் அருள் மாவட்ட தலைவர் பாஸ்கர் துணைச் செயலாளர் பழனி மாநில செயலாளர் ரவிசங்கர் இளைஞரணி ராஜா பிரபா கொளஞ்சி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்













