திருவாரூர் அருகே திருவிக அரசு கலைக் கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்காத தமிழக அரசை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டம். மறியல் காரணமாக திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.
திருவாரூர் அருகே கிடாரம்கொண்டான் திரு வி க அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் ஆண்டு மன்றம் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டதை திரும்ப செலுத்த வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தற்போது வலியுறுத்துவதாகவும் அதன் பிறகு கல்லூரி படிப்பு முடித்த மாற்றுச் சான்றிதழை வழங்க முடியும் எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் ,கல்லூரியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக திடீரென மாணவ மாணவிகள் திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர் மாணவ மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடனடியாக அரசு அதிகாரிகள் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவிய வருகிறது.
மறியல் காரணமாக திருவாரூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேட்டி: சுகதேவ். மாவட்ட செயலாளர்.
இந்திய மாணவர் சங்கம்













