மயிலாடுதுறையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முகங்களில், மனித உரிமைகளை மீறும் வகையில் பிளாஸ்டிக் கேரி கவர் கொண்டு மூடிய காவல்துறையினர் அதனை , புகைப்படம் எடுத்து வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக இருந்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா உத்தரவின் பெயரில் போதை தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மயிலாடுதுறை நகரில் வாகன சோதனைகள் ஈடுபட்ட பொழுது தரங்கம்பாடி சாலையில் வந்தார் இரண்டு சொகுசு கார்களை நிறுத்த முயன்றபொழுது, கார் நிற்காமல் சென்றுள்ளது காவல்துறையினர் சில கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று காரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 50 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. காரில் இருந்த மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த கணபதி ராஜமாணிக்கம் விக்னேஷ் பாலசுந்தரம் மற்றும் மதுரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கணபதி ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து கஞ்சாவுடன் இரண்டு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குற்றவாளிகள் குறித்து காவல்துறை சார்பில் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு புகைப்படம் வழங்கப்பட்டது. இதில் கடத்தலில் பிடிபட்ட கஞ்சா பொட்டலங்களுடன், குற்றவாளிகள் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடியபடி இருப்பது தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக் பைகளை கொண்டு மூடுவதால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்ற நிலையில், மனித உரிமைகளை மீறும் வகையில் காவல்துறையினர் குற்றவாளிகள் முகத்தில் பிளாஸ்டிக் பைகளை போட்டு மூடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.














