சீர்காழியில் திடீர் தீவிபத்தில் 2 வீடுகள் எரிந்ததில் ஆறரை பவுன் தங்கநகைகள்,வெள்ளி பொருட்கள் ரொக்க பணம் எரிந்து சேதம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டுத்தெருவை சேர்ந்தவர் கமுதி.கலைவாணன் இவர் மாடி வீட்டின் மேல்பகுதியில் கூரை வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இன் நிலையில் இவரது வீட்டிற்கு அருகே உள்ள விஜயன் என்பவருக்கு சொந்தமான மூங்கில் தோப்பில் திடிரென தீபிடித்து எரிய தொடங்கியது.காற்று பலமாக வீசியதால் தீ மள,மளவென பரவி அருகிலிருந்த கமுதி.கலைவாணன் கூரை வீட்டில் தீப்பற்றி முழுமையாக எரியத்தொடங்கியது.தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு அருகிலிருந்தவர்கள் தீயை அணைக்க தொடங்கினர்.சீர்காழி தீயணைப்பு வாகனம் மற்றோரு தீவிபத்தில் இருந்ததால் பூம்புகாரில் இருந்து தீயணைப்பு வாகனம் தாமதமாக வந்து தீயை அணைத்தனர்.இதில் கலைவாணனின் வீடு முற்றிலுமாக எரிந்து வீட்டிலிருந்து பீரோ,பேன்,ஃபிரிட்ஜ்,டீவி உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமாகின மேலும் பிரோவில் வைத்திருந்த ஆறரை பவுன் தங்க நகைகள்,வெள்ளி பொருட்கள்,ரூ.45ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவையும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.அதேபோல் மூங்கில் தோப்பின் பின்புறத்திலிருந்த நிஷா என்பவருக்கு சொந்தமான மாடி வீட்டின் ஜன்னல்,கண்ணாடிகள்,கதவுகள் தீவிபத்தில் சேதம் அடைந்தது. மேலும் ராசு என்பவருக்கு சொந்தமான கொட்டகையில்வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்,கட்டுமான பொருட்களும் எரிந்து சேதமானது.வீடு முற்றிலும் எரிந்த சம்பவம்அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .தீ விபத்து குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














