மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரத்தில் பழமை வாய்ந்ததும் புகழ்பெற்றதுமான ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்துள்ளே வள்ளி தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, துர்கா அம்பிகை ஆஞ்சநேயர் மற்றும் நவகிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு அந்த 21ஆம் தேதி கும்பாபிஷேக பூர்வாங்க பணிகள் துவங்கின தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது. இன்று காலை நான்காம் காலை யாகசாலை பூஜைகள் மகா பூர்ணாகுதியுடன் நிறைவடைந்த நிலையில், மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கர்ப்ப கிரகத்தின் உள்ளே சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று தீபராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.














