சீர்காழி அருகே, பழையார் மீனவர் கிராமத்தில் டீசல் விலை ரூபாய் 146 விலையேற்றம் ,மானிய டீசல் ரூபாய் 83 க்கு வழங்காததை கண்டித்து மீனவர்கள் அரசு பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் சாலை மறியல் தொடர்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு.டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையார் மீனவ கிராமத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இப்பகுதி மீனவர்களின் நலனுக்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மானிய விலையில் டீசல் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. தற்போது வணிக டீசல் ரூபாய் 146 க்கு விலை ஏற்றம் செய்துள்ளதால் மானிய டீசல் கொடுக்கப்படாமல் பங்க் மூடப்பட்டுள்ளது
அருகிலுள்ள மீனவ கிராமமான வாணகிரி கிராமத்தில் மானிய விலையில் ஒரு லிட்டர் டீசல் 86 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாகவும், பழையார் கிராமத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக பங்க்கில் மானிய டீசல் கொடுக்காமல் ஒரு லிட்டர் 146 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே டீசல் விலை உயர்வால் தவித்து வரும் மீனவர்களுக்கு, தற்போது உயர்த்தப்பட்டுள்ளது பேரிடியாக அமைந்துள்ளது.
60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் நாளை இரவு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருக்கும் சூழ்நிலையில் மீன் வளர்ச்சி கழக டீசல் பங்க் மூடி கிடப்பதாகவும். ஒரு லிட்டர் டீசல் 146 ரூபாய்னு சொன்னா நாங்க எப்படி படகை இயக்க முடியும்? எங்களுக்கு வழக்கமான மானிய விலையில 86 ரூபாய்க்கு டீசல் தரணும். இல்லைன்னா எங்க வாழ்வாதாரமே முடங்கி விடுவதாகவும்
தொடர்ந்து டீசல் பங்க் மூடப்பட்டுள்ளதாலும், விலை உயர்வாளும் ஆத்திரமடைந்த மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து பழையார் மீன்பிடித் துறைமுகத்தில் முதலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் பழையார் – சீர்காழி சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். இதனால் மாலை 5 மணி அளவில் தொடங்கிய சாலை மறியல் இரவு 8 மணி வரை 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்றது. இதனை அறிந்த மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் மீனவர்கள் கோரிக்கை உடனடியாக பரிசளிக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததை அடுத்து மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.
மீனவர்கள் நடத்திய சாலை மறியலால் பழையார் சீர்காழி இடையே போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.















