சீர்காழி ஸ்ரீ மந்த கருப்பண்ண சுவாமி கோயிலில் முளைப்பாலி திருவிழா நடைபெற்றது..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மந்த கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ ஏழைகாத்த அம்மன் ஆலயத்தில் முளைப்பாலி திருவிழா நடைபெற்றது . விழாவை ஒட்டி கோயிலில் இருந்து பெண்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வைத்திருந்த முளைப்பாலியை தலையில் சுமந்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சட்டநாதபுரம் உப்பனாற்றில் முளைப்ப்பாலியை கரைத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். முன்னதாக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.













