தமிழக முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி நகர மகப்பேறு அரசு தலைமை மருத்துவமனையில், ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24-ஆம் தேதியன்று பிறந்த 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ‘தங்க மோதிரம்’ அணிவித்து வாழ்த்து தெரிவிக்கும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணா திமுக துணைப் பொதுச்செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி அவர்கள் நேரில் வருகை தந்து, பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்து, அவர்களின் தாய்மார்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் பரிதா நவாப் மற்றும் உறுப்பினர் நவாப் ஆகியோர் இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் கேக் வெட்டி வழங்கப்பட்டது. ஜெயலலிதா அவர்களின் மக்கள் நலப்பணிகளை நினைவு கூரும் வகையில் நடைபெற்ற இந்தத் திட்டமானது, பயனடைந்த தாய்மார்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் அமீது, கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் பி.என்.ஏ.கேசவன், நகரத் துணைச் செயலாளர் குரு, காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பையூர் ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியச் செயலாளர் கன்னியப்பன், கிருஷ்ணகிரி வடக்கு ஒன்றியச் செயலாளர் சூர்யா, பர்கூர் நகரச் செயலாளர் கணேசன், ஊத்தங்கரை நகரச் செயலாளர் சிக்னல் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பாசறை மாவட்டச் செயலாளர் கே.பி.எம்.சதீஷ்குமார், பேரவை மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.மாதைய்யன், இணைச் செயலாளர் தாபா.வெங்கட்ராமன், தலைவர் தங்கமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு சேலம் மண்டல தலைவர் ராஜசேகர், மருத்துவர் அணி மாவட்டச் செயலாளர் இளையராஜா, மருத்துவர் அணி மாவட்டத் தலைவர் அசோக்குமார், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்டச் செயலாளர் ஆஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் வேலன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் அ.மக்பூல், மீனவர் அணி மாவட்டச் செயலாளர் புகழேந்தி, இளைஞரணி மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராகுல், முன்னாள் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சரவணன், முன்னாள் நகர மன்றத் துணைச் செயலாளர் வெங்கடாசலம், பர்கூர் முன்னாள் நகரச் செயலாளர் துரைராஜ், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
















