மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மர்மநபர்களால் கிழிப்பு மயிலாடுதுறை போலீசார் விசாரணை.
இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி மயிலாடுதுறை மாவட்ட தலைவராக வி.ஆர்.எஸ் பானுசேகர் என்பவர் கட்சி தலைமையால் கடந்த வாரம் நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து மயிலாடுதுறையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான காமராஜர் மாளிகையில் முன்பும், எதிர்புறமும் ராஜசேகரனுக்கு நேற்று இரவு வாழ்த்து பதாகை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அலுவலகத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியினர், வாழ்த்து பேனர்கள் கிழிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மூன்று பேனர்கள் முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

















