மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ 5 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு கட்டுமான பணியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் தனித்தனியாக அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட அளவில் ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு அமைக்க அரசு உத்தரவிட்டது.இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ 5 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு கட்டுமான பணியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில் தட்கோ தலைவர் மதிவாணன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் பராமரிப்பு பணிகள் துறை அதிகாரிகள், மயிலாடுதுறை நகரமன்ற செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
















