தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மாநகர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தீவிரப் பிரச்சாரப் பணி மதுரையில் எழுச்சியுடன் தொடங்கியது. மதுரை மூன்றுமாவடி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ அவர்கள் பொதுமக்களிடம் நேரடியாக வழங்கி வாக்கு சேகரித்தார். வடக்கு 1-ம் பகுதி செயலாளர் கே.வி.கே.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வட்ட செயலாளர் மாரிஆனந்தப்பன் முன்னிலை வகித்தார். மூன்றுமாவடி பகுதியிலுள்ள கடை வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்ற செல்லூர் ராஜூ, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்பட உள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்துப் பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார்.
இந்தத் தீவிரப் பிரச்சாரப் பயணத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாத்துரை மற்றும் பா.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் எம்.எஸ்.கே.மல்லன், திரவியம், சக்தி விநாயகர் பாண்டியன், எம்.ஜி.ராமச்சந்திரன், பேராசிரியர் ஜெயபால், வி.பி.ஆர்.செல்வகுமார், வி.கணேசன் உள்ளிட்டோர் மக்களிடையே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். இந்த நிகழ்வில் சுகந்தி அசோக், ஆர்.பாஸ்கரன், ஜோசப்தனிஸ்லாஸ், கே.எஸ்.சுப்பு, அண்ணாநகர் ரவிச்சந்திரன், யோகேஷ்வரன், ஏ.முருகன், கார்மேகம், நடராஜன், முத்துமுருகன், பூமிராஜ் மற்றும் சின்னபாண்டி எனப் பெரும் நிர்வாகிகள் பட்டாளமே அணிவகுத்து நின்றது.
வட்டச் செயலாளர்கள் கே.வி.கே.வெங்கடேசன், ஆசைபாண்டி, கருப்பசாமி, கார்த்திகேயன் மற்றும் சபரிபாண்டி உள்ளிட்ட பலரும் தங்களது தொண்டர்களுடன் இணைந்து இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் மதுரையில், தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே முன்னாள் அமைச்சரின் இந்த நேரடி களப்பணி கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டதோடு, தங்கள் பகுதி குறைகளையும் முன்னாள் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர்.
















