- தனது உடலில் ரத்தம் ஒடுவதற்கு பதில் சூடான சிந்தூர் ஓடுகிறது என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.
- அமலாக்கத் துறை அனைத்து எல்லைகளையும் கடந்து, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உச்ச நீதிமன்றம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. மேலும், முறைகேடு புகாரில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.
- பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், தீவிர மதக்கண்ணோட்டத்தில் இயக்கப்படுகிறார். அவரது பேச்சுக்கு பிறகு தான் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர், என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
- அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி டில்லியில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இன்று திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், பிகானீர்-மும்பை விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- RTE சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்? என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
- ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ அல்லது படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு
- செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சென்னை: மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதில் தமிழக அரசு அடைந்த தோல்விக்காக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்று பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
- தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டத்திருத்தங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
- சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கணவன் – மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.