ஹைதராபாத் : வீட்டு வாடகைசெலுத்தியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர் ஒருவர் வீட்டின் உரிமையாளர் தாயின் விரலை கடித்த அதிர்ச்சி சம்பவம் ஹைதராபாத் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூபிலி ஹில்ஸில் உள்ள ஜவஹர்நகரைப் பகுதியைச் சேர்ந்த மமதா மற்றும் அவரது கணவர் ஹேமந்த் ஆகியோர், கடந்த மூன்று ஆண்டுகளாக சுஜிதா என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கி வந்துள்ளனர். ஏப்ரல் மாதம் வீட்டை காலி செய்த அவர்கள், தங்களது தோழி சுப்ரியாவை அங்கு வாடகைக்கு குடியிருக்க பரிந்துரைத்தனர்.
வீட்டில் ஒரு மாதம் தங்கிய சுப்ரியா, வாடகை செலுத்தாமல் திடீரென வெளியேறினார். இதனால் ஏற்பட்ட நட்டத்தை சமன்செய்ய, மமதா மே 17ஆம் தேதி சுஜிதாவை சந்தித்து, தனது சுயநிதி நிறுவனத்துக்கான மாத தவணை தொகையான ரூ.30,000-ஐ தரும்படி கேட்டுள்ளார்.
சுப்ரியா வாடகை செலுத்தவில்லை என்பதால் ரூ.5,000 குறைத்துவிட்டு, மீதமுள்ள தொகையை மட்டும் தர முடியும் என சுஜிதா கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இருபுறத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, மமதாவின் கணவர் ஹேமந்த் கடும் கோபத்தில் சுஜிதாவின் தாய் லதாவின் வலது ஆள்காட்டி விரலை கடித்துள்ளார்.
இந்த தாக்குதலால் விரல் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லதா, விரலை மீண்டும் இணைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து சுஜிதா அளித்த புகாரின் பேரில் மதுரா நகர் போலீசார் ஹேமந்தை கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.