இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் மற்றும் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனாக்கு, அவரது காதலன் மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முஞ்சால் கிரிக்கெட் மைதானத்தில் அளித்த ப்ரொபோசல் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற உலகக்கோப்பை தொடரில் முக்கிய பங்கு வகித்த மந்தனா, WPL-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். நீண்ட நாட்களாக காதலில் இருந்த இவர்களுக்கு இடையே நடந்த ஒரு ரொமான்டிக் தருணமே தற்போது இணையத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது.
மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில், கண்களை கட்டி மந்தனாவை மைதானத்தின் நடுப்பகுதிக்கு அழைத்து வந்த பலாஷ், பின்னர் முழங்காலில் அமர்ந்து ரோஜா மலர்தொகுப்பு மற்றும் மோதிரத்துடன் தனது காதலை வெளிப்படுத்தினார்.
அதிர்ச்சியடைந்த மந்தனா, மகிழ்ச்சியுடன் “ஆம்” என்று பதில் கூறினார். இந்த இனிய தருணத்தை வீடியோவாக பதிவு செய்து பலாஷ் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததும், சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ ஆயிரக்கணக்கான விருப்பங்கள் மற்றும் பகிர்வுகளை பெற்று வைரலாகியுள்ளது.

















