May 13, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கொடைக்கானல் பைன் மரக் காட்டில் விபத்து

by sowmiarajan
November 12, 2025
in News
A A
0
கொடைக்கானல் பைன் மரக் காட்டில் விபத்து
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

கொடைக்கானலின் பிரபல சுற்றுலாத் தலமான பைன் மரக் காடுகள் பகுதியில், ஏற்றமான சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈச்சர் வேன் ஒன்று பின்னோக்கி நகர்ந்து அருகிலிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்று பைன் மரக் காடுகள். இந்தச் சுற்றுலாத் தலத்திற்கான சாலை ஏற்றமாகக் காணப்படுவதால், வாகனங்கள் கடந்து செல்வது சற்றுக் கடினம்.

திண்டுக்கல் வடமதுரையில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈச்சர் வேன் ஒன்று பைன் மரக் காடுகளுக்கு வந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை இறக்கிவிட்ட ஓட்டுநர், ஏற்றமான சாலையில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். வாகனம் பின்னோக்கி நகராமல் இருக்க, ஓட்டுநர் வாகனத்தில் இருந்து இறங்கி டயருக்கு அடியில் கல்லை வைக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக ஈச்சர் வேன் பின்புறமாக வேகமாக நகரத் தொடங்கியது. பின்நோக்கி நகர்ந்த வேன், வலது மற்றும் இடது பக்கங்களில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது மோதி சேதப்படுத்தியது.

இந்த விபத்தில், டெம்போ, எர்டிகா கார், ஸ்கோடா கார் உள்ளிட்ட வாகனங்கள் சிறிய அளவில் சேதமடைந்தன. இறுதியாக, அந்த வேன் எடியோஸ் கார் மீது மோதி நின்றது. எடியோஸ் கார் முன்பக்கம் முழுவதும் பலத்த சேதமடைந்தது. மோதிய வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லாததாலும், வாகனம் நகர்ந்த போது சாலையில் சுற்றுலாப் பயணிகள் யாரும் நடமாடாததாலும், அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக பைன் மரக் காடு சுற்றுலாத் தலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பரபரப்பாகவும் காணப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், வாகனங்களை நிறுத்துவதற்கும், பாதுகாப்பிற்கும் உரிய நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்தச் சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் வாகனத்தைச் செலுத்த வேண்டும் என வனத்துறையும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: dindgul newseicher vanforest officeKODAIKANAL NEWSkodaikannal forestpeoplespine forestroad accident
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குடியிருப்புப் பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டெருமைக் கூட்டம்

Next Post

கொடைக்கானல் மலைச் சாலைகளில் பட்டுப்போன மரங்கள் ஆபத்து

Related Posts

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்
News

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது
News

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்
News

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்
News

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026
Next Post
கொடைக்கானல் மலைச் சாலைகளில் பட்டுப்போன மரங்கள் ஆபத்து

கொடைக்கானல் மலைச் சாலைகளில் பட்டுப்போன மரங்கள் ஆபத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

0
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

0
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

0
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

0
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026

Recent News

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.