May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

கொடநாடு  குற்றச்சாட்டு:  “ஜெயலலிதாவால் நீக்கப்பட்டதால்  டிடிவி  தினகரனுக்கு மனநிலை பாதிப்பு” – ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்

by sowmiarajan
November 7, 2025
in Breaking News, News
A A
0
கொடநாடு  குற்றச்சாட்டு:  “ஜெயலலிதாவால் நீக்கப்பட்டதால்  டிடிவி  தினகரனுக்கு மனநிலை பாதிப்பு” – ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியதற்கு, அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கடுமையான பதிலடி கொடுத்தார். டிடிவி தினகரனின் பேச்சு மனநிலை பாதிக்கப்பட்டவரின் புலம்பல் போல இருப்பதாக அவர் விமர்சித்தார்.

ஜெயலலிதா நீக்கியதால் வந்த மனநிலை பாதிப்பு

ஆர்.பி. உதயகுமார் தனது பேட்டியில், டிடிவி தினகரனின் அரசியல் வரலாறு மற்றும் அவரது தற்போதைய கருத்துக்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 10 ஆண்டு நீக்கம்: “ஜெயலலிதா அவர்கள், டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து 10 ஆண்டுகள் நீக்கி வைத்திருந்தார். அதனால், அவரது மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது. ‘நீ என்னப்பா பைத்தியம், என்ன வேண்டுமானாலும் பேசலாம்’ என்று கிராமங்களில் பேசுவார்கள். அதுபோலத்தான் டிடிவி தினகரனின் பேச்சும் உள்ளது,” என்று உதயகுமார் கடுமையாக விமர்சித்தார். விரக்தியின் வெளிப்பாடு: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியையும் ஆட்சியையும் அபகரிக்கத் திட்டம் தீட்டினார் டிடிவி தினகரன், ஆனால் அவரது பருப்பு எடப்பாடி பழனிசாமியிடம் வேகவில்லை. அந்த விரக்தியின் வெளிப்பாடாகவே அவர் தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நம்பிக்கைத் துரோகம்: விலகிச் சென்றவர்களின் நிலை

டிடிவி தினகரனின் பேச்சால் குழப்பமடைந்து அவரை நம்பிப் பின் சென்றவர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து தினகரன் கவலை கொண்டதுண்டா என்றும் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.செந்தில் பாலாஜி, தங்கத் தமிழ் செல்வன்: “டிடிவி தினகரனை நம்பிச் சென்றவர்களின் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா? அவருடன் இருந்த தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தி.மு.க.வுக்கு சென்றபோது ஏன் கவலைப்படவில்லை?” என்று ஆர்.பி.உதயகுமார் கேட்டார்.

பொதுவெளியில் அடாவடியா?: பொதுவெளியில் டிடிவி தினகரன் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாமா? என்று வினவிய அவர், இன்று செல்வாக்கு, பதவி, அடையாளம், ஆதரவு என அனைத்தையும் இழந்துவிட்டு, அரசியலின் அடிப்படைப் பண்புகளைக் காற்றில் பறக்கவிட்டு அடாவடி அரசியல் செய்து வருகிறார் என்று சாடினார்.

கொடநாடு விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை

கொடநாடு வழக்கு குறித்து டிடிவி தினகரன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் உதயகுமார் பதிலளித்தார். சட்ட ரீதியான நடவடிக்கை: “தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது கொடநாடு வழக்கில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது குறித்து சட்டமன்றத்தில் நீண்ட விவாதம் நடத்தப்பட்டு அவைக் குறிப்பில் உள்ளது” என்று உதயகுமார் தெளிவுபடுத்தினார்.  23ஆம் புலிகேசி நிலை: “தான் எடப்பாடி பழனிசாமிக்கு சிம்ம சொப்பனம் என்று டிடிவி தினகரன் கூறுகிறார். இன்று மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் சிம்ம சொப்பனமாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமிதான். தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொள்ளும் 23ஆம் புலிகேசி நிலைக்கு டிடிவி தினகரன் சென்றுவிட்டார்” என்றும் அவர் கிண்டல் செய்தார்.

ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்: கோவை மண்டலத்தில் உயர் மட்ட தேர்தல் ஆணைய ஆய்வுக்கூட்டம் – நேரில் ஆய்வு செய்கிறார் மத்திய துணை ஆணையர்

Next Post

கொடநாடு வழக்கு முதல் உறவினர்களின் ஆதிக்கம் வரை: எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

Related Posts

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்
News

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
News

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
Next Post
கோபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்; அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு

கொடநாடு வழக்கு முதல் உறவினர்களின் ஆதிக்கம் வரை: எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

0
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

0
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

0
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

0
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026

Recent News

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.